கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,741- பேருக்கு கொரோனா
கொரொனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,679- ஆக உயர்ந்துள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,741- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 54,309- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் தொற்று பாதிப்பு விகிதம் 8.72 சதவிகிதமாக உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 5,144- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 48,501 ஆக குறைந்துள்ளது. இவர்களில் 7.4 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story