கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,741- பேருக்கு கொரோனா


கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,741- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 27 Nov 2021 1:30 PM GMT (Updated: 27 Nov 2021 1:30 PM GMT)

கொரொனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,679- ஆக உயர்ந்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,741- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 54,309- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் தொற்று பாதிப்பு விகிதம் 8.72 சதவிகிதமாக உள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 5,144- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை  48,501 ஆக குறைந்துள்ளது. இவர்களில் 7.4 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Next Story