டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 34 பேருக்கு கொரோனா


டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 34 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 29 Nov 2021 11:47 AM GMT (Updated: 29 Nov 2021 11:47 AM GMT)

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 36 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 15 ஆயிரத்து 517- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25,098- ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 285- ஆக உள்ளது.  தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 43,399- மாதிரிகள் பரிசோதனை செய்யபட்டுள்ளது. 

தொற்று பாதிப்பு விகிதம் 0.08- சதவிகிதமாக உள்ளது. அதேபோல், 28,098- பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா மொத்த பாதிப்பு விகிதம் 4.67- சதவிகிதமாக உள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.74-சதவிகிதமாக உள்ளது.

Next Story