கேரளாவில் நோரோ வைரசால் பாதித்த 54 மாணவிகளுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை


கேரளாவில் நோரோ வைரசால் பாதித்த 54 மாணவிகளுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
x
தினத்தந்தி 29 Nov 2021 7:25 PM GMT (Updated: 29 Nov 2021 7:25 PM GMT)

கேரளாவில் நோரோ வைரசால் பாதித்த 54 மாணவிகளுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

திருவனந்தபுரம்,

இந்தியாவில் வித விதமான வைரஸ் நோய்களின் பிறப்பிடமாக கேரளா உள்ளது. உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வெளிநாட்டில் இருந்து பரவியது என்று கூறப்பட்டாலும், இந்தியாவில் முதன்முதலில் கேரளாவில் இருந்து தான் பரவியது. அதை தொடர்ந்து ஜிகா, நிபா என புதுப்புது வைரசுகள் கேரளாவில் கண்டு பிடிக்கப்பட்டன. 

இந்த நிலையில் திருச்சூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி தங்கும் விடுதியில் 54 மாணவிகளுக்கும், 3 ஊழியர்களுக்கும் நோரோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 8-ந் தேதி முதல் நோரோ தொற்று அறிகுறி தென்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்்சை பெற்றனர். இதில் 8 பேர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வந்த போது நோரோ வைரஸ் குறித்து சுகாதார துறையின் கவனத்திற்கு வந்தது. 

வைரஸ் பாதித்தவர்களின் ரத்தம் திருச்சூர் மருத்துவ கல்லூரி மற்றும் ஆலப்புழை வைராலஜி ஆய்வு கூடம் ஆகியவற்றில் பரிசோதிக்கப்பட்டது. இதில் நோரோ வைரஸ் பாதிப்பு உறுதியானது. அசுத்தமான குடிநீர் காரணமாக இந்த வைரஸ் பரவியதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Next Story