பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நக்மா தலைமையில் டெல்லியில் போராட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் மகளிர் அணிசார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுடெல்லி,
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மகளிர் அணி பொதுச்செயலாளர் நக்மா தலைமையில் ஏராளமான பெண்கள் கலந்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக தடுப்புகள் மீது ஏறி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story