இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு


இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு
x
தினத்தந்தி 5 Dec 2021 4:51 AM GMT (Updated: 5 Dec 2021 4:51 AM GMT)

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,

நமது நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு இறங்குமுகம் கண்டு வருகிறது. நேற்று 8,603 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து இன்று சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 895 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 46 லட்சத்து 33 ஆயிரத்து 255 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 6 ஆயிரத்து 948 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 60 ஆயிரத்து 774 ஆக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 99 ஆயிரத்து 155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,796  பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பீகாரில் நேற்று 2,426 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டன. இதனால், கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 73 ஆயிரத்து 326 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,04,18,707 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தடுப்பூசி செலுத்த்ப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,27,61,83,065 ஆக உயர்ந்துள்ளது.


Next Story