தெலுங்கானாவில் மருத்துவ கல்லூரியின் 43 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி


தெலுங்கானாவில் மருத்துவ கல்லூரியின் 43 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 6 Dec 2021 12:27 PM GMT (Updated: 6 Dec 2021 12:27 PM GMT)

தெலுங்கானாவில் மருத்துவ கல்லூரி ஒன்றின் 43 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.



கரீம்நகர்,

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 6,69,157 ஆக உள்ளது.  இதுவரை 3,999 பேர் உயிரிழந்து உள்ளனர்.  3,787 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், தெலுங்கானாவின் கரீம்நகரில் பொம்மக்கல் கிராமத்தில் உள்ள சல்மேடா ஆனந்த் ராவ் மருத்துவ அறிவியல் மையத்தில் 43 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.


Next Story