கேஸ் சிலிண்டர் ஏற்றிவந்த லாரி - பஸ் மோதல்; 7 பேர் பலி


கேஸ் சிலிண்டர் ஏற்றிவந்த லாரி - பஸ் மோதல்; 7 பேர் பலி
x
தினத்தந்தி 5 Jan 2022 7:08 AM GMT (Updated: 5 Jan 2022 7:08 AM GMT)

கேஸ் சிலிண்டர் ஏற்றிவந்த லாரியும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் பகூர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று காலை கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி சென்றுகொண்டிருந்தது.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்து  சாலையின் மறுபுறம் வேகமாக வந்த பஸ் கேஸ் சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 24 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story