காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இடையே தற்போது துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் புத்காமின் சோல்வா க்ரால்போரா சதூரா பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் இன்று காலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். சதூரா என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டாத முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன.
சம்பவ இடத்தில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்திவருவதாக காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story