அசுர வேகத்தில் கொரோனா..... நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,59,632 பேர் பாதிப்பு...!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 9 Jan 2022 4:28 AM GMT (Updated: 9 Jan 2022 4:28 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,59,632 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் பல்லாயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. நேற்று கொரோனாவால் 1,41,986 பேர் பாதிக்கபட்டனர். 

இந்நிலையில் நாட்டில் இன்று புதிதாக 1,59,632 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 17,646 அதிகமாகும். 

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 59 ஆயிரத்து 632 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை  3,55,27,944 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 327 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,83,790 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 40,863 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,44,53,603 ஆக உயர்ந்துள்ளது.


Next Story