வெறுப்பை வீழ்த்த தேர்தல் சரியான நேரம்: ராகுல் காந்தி


வெறுப்பை வீழ்த்த  தேர்தல் சரியான நேரம்: ராகுல் காந்தி
x
தினத்தந்தி 10 Jan 2022 9:35 AM GMT (Updated: 10 Jan 2022 9:35 AM GMT)

வெறுப்பை பரப்புவர்களை வீழ்த்த தேர்தல் சரியான தருணம் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

வெறுப்பை பரப்புவர்களை வீழ்த்த தேர்தல் சரியான தருணம் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி  தெரிவித்துள்ளார். வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக உத்தர பிரதேசம் உள்பட ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.  

இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்படுகிறது.  தேர்தலை முன்னிட்டு ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி தனது டுவிட் பதிவில், வெறுப்பை வீழ்த்த இதுதான் சரியான வாய்ப்பு - தேர்தல் 2022” என இந்தியில் பதிவிட்டுள்ளார். 

 உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றும் நோக்கிலும் பஞ்சாபில் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பிலும் காங்கிரஸ் ஐந்து மாநில தேர்தலை எதிர்கொள்கிறது. 


Next Story