3 சிறுமிகள் படுகொலை; அரியானாவில் சீரியல் கில்லர் கைது


3 சிறுமிகள் படுகொலை; அரியானாவில் சீரியல் கில்லர் கைது
x
தினத்தந்தி 10 Jan 2022 2:02 PM GMT (Updated: 10 Jan 2022 2:02 PM GMT)

அரியானாவில் 3 சிறுமிகள் படுகொலை சம்பவத்தில் சீரியல் கில்லர் கைது செய்யப்பட்டார்.


சண்டிகார்,

அரியானாவில் 22 வயது இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பரிதாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  இந்த வழக்கில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை கைது செய்தனர்.

அந்நபரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.  இதுபற்றி போலீசார் கூறும்போது, கைது செய்யப்பட்ட நபர் இதற்கு முன்பு, பாலியல் வன்கொடுமை முயற்சியில் எதிர்ப்பு தெரிவித்த 3 சிறுமிகளை படுகொலை செய்ததும், குற்றவாளி ஒரு சீரியல் கில்லர் என்பதும் தெரிய வந்துள்ளது என தெரிவித்து உள்ளனர்.  தொடர்ந்து அந்நபரிடம் விசாரணை நடந்து வருகிறது.


Next Story