உத்தர பிரதேசத்தில் பாஜக மந்திரியின் திடீர் ராஜினாமாவால் பரபரப்பு


உத்தர பிரதேசத்தில் பாஜக மந்திரியின் திடீர் ராஜினாமாவால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Jan 2022 9:22 AM GMT (Updated: 11 Jan 2022 9:22 AM GMT)

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள சுவாமி பிரசாத் மயூரா திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

லக்னோ,

நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  403- தொகுதிகளை கொண்ட மாநிலம் என்பதால், உத்தர பிரதேச தேர்தல் நாடு முழுவதும் உற்று நோக்கப்படுவது வழக்கம். தேர்தல் தேதி அறிவிப்பால் உத்தர பிரதேசத்தில் தேர்தல் களம் அனல் பறக்கத்தொடங்கியுள்ளது.

 உத்தரபிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. இங்கு ஆட்சியைத் தக்க வைக்க பா.ஜ.க. கடும் முயற்சியில் இறங்கி உள்ளது. அதே நேரத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி முனைப்பாக உள்ளது. அவற்றுடன் பகுஜன் சமாஜ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் களத்தில் உள்ளன. தற்போதைய சூழலில் அங்கு 4 கட்ட போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில்  யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள சுவாமி பிரசாத் மயூரா திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாஜகவில் இருந்தும் விலகி அகிலேஷ் யாதவ் கட்சியில் இணைந்துள்ளதால் அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


Next Story