கேரளாவில் மேலும் 9,066- பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,066- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,066- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 63,898- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 14.18 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 2,064-பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 44,441- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50,053- ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக திருவனந்தபுரத்தில் அதிகபட்சமாக 2,200- பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் 1,478- பாதிப்பு பதிவாகியுள்ளது. திரிசூரில் 943- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story