கேரளாவில் மேலும் 9,066- பேருக்கு கொரோனா


கேரளாவில் மேலும் 9,066- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 Jan 2022 2:08 PM GMT (Updated: 11 Jan 2022 2:08 PM GMT)

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,066- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,066- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 63,898- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 14.18 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும்  2,064-பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 44,441- ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50,053- ஆக அதிகரித்துள்ளது. 

மாவட்ட வாரியாக திருவனந்தபுரத்தில்  அதிகபட்சமாக 2,200- பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.  எர்ணாகுளம் மாவட்டத்தில் 1,478- பாதிப்பு பதிவாகியுள்ளது. திரிசூரில் 943- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


Next Story