கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு


கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 12 Jan 2022 1:44 PM GMT (Updated: 12 Jan 2022 1:44 PM GMT)

கேரளாவில் 3 மாதங்களுக்குப் பிறகு தொற்று பாதிப்பு மீண்டும் 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,742 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்குப் பிறகு கேரளாவில் தொற்று பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கேரளாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 53,04,022- ஆக உயர்ந்துள்ளது. 

கேரளாவில் கடந்த அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி தொற்று பாதிப்பு 11,150- ஆக பதிவானது. அதன்பிறகு தற்போதுதான் தொற்று பாதிப்பு இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 2,552- பேர் குணம் அடைந்துள்ளனர். 

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 52,07,762- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 54,430-ஆக  உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50,254- ஆக உயர்ந்துள்ளது. 

Next Story