மராட்டியத்தில் அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 46,723 பேருக்கு தொற்று..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 12 Jan 2022 3:45 PM GMT (Updated: 12 Jan 2022 3:45 PM GMT)

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும்  தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

அதன்படி, மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று மேலும் 46,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 32 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,41,701 ஆக அதிகரித்துள்ளது.

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 28,041 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 66,49,111 ஆக அதிகரித்துள்ளது.  தற்போது வரை மாநிலத்தில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 122 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் தற்போது ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,367 ஆக அதிகரித்துள்ளது. 

Next Story