அயோத்தியில் யோகி ஆதித்யநாத் களமிறங்குகிறார்?


அயோத்தியில் யோகி ஆதித்யநாத் களமிறங்குகிறார்?
x
தினத்தந்தி 12 Jan 2022 10:35 PM GMT (Updated: 12 Jan 2022 10:35 PM GMT)

உத்தரபிரதேச தேர்தலில் யோகி ஆதித்ய நாத்தை இந்த முறை அயோத்தியில் களமிறக்க பா.ஜ.க. உயர்மட்ட தலைவர்கள் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி,

உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் உத்தரபிரதேச முதல்-மந்திரியாக இருக்கும் யோகி ஆதித்ய நாத்தை இந்த முறை அயோத்தியில் களமிறக்க பா.ஜ.க. உயர்மட்ட தலைவர்கள் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்ய அனைத்து கட்சிகளும் மும்முரம் காட்டி வருகின்றன. பிப்ரவரி 10 மற்றும் 14 ஆகிய தேதிகளில் உத்தரபிரதேசத்தில் முதல் இரண்டு கட்ட தேர்தல் நடைபெறவுள்ள இடங்கள் உள்பட அதிக எண்ணிக்கையிலான இடங்களுக்கான வேட்பாளர்களை இறுதி செய்ய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழு விரைவில் கூட உள்ளது.

அயோத்தி, மதுரா மற்றும் யோகி ஆதித்யநாத்தின் பாரம்பரிய தொகுதியான கோரக்பூர் ஆகியவற்றில் அவர் பலமுறை வெற்றி வாய்ப்பை வழங்கியிருப்பதால் கட்சியின் முக்கிய இந்துத்துவ முகமான ஆதித்யநாத்தின் விருப்பத் தொகுதியாகவும் அயோத்தி கருதப்படுகிறது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில், யோகி ஆதித்யநாத் அங்கு களமிறக்கப்பட்டால் அவர்களின் இந்துத்துவா திட்டத்தை பலப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் கட்சி மேலிடம் இதுவரை அதுபற்றிய தகவலை உறுதிப்படுத்தவில்லை.

Next Story