நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம்: ஜனவரி 31-ல் தொடங்குகிறது; 2 கட்டமாக நடத்த முடிவு


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம்: ஜனவரி 31-ல் தொடங்குகிறது; 2 கட்டமாக நடத்த முடிவு
x
தினத்தந்தி 14 Jan 2022 7:44 AM GMT (Updated: 14 Jan 2022 7:44 AM GMT)

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ந்தேதி தொடங்க இருக்கிறது. 2 கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து 2022-23ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31-ந்தேதியிலிருந்து தொடங்க இருக்கிறது.

2022-23 ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, ஜனவரி 31-ந்தேதியிலிருந்து பிப்ரவரி 11 வரை முதல் கட்டமாகவும் மார்ச் 14-ந்தேதியிலிருந்து ஏப்ரல் 8-ந்தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2022-23 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ந்தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறார்.

Next Story