சிக்கிமில் மேலும் 385- பேருக்கு கொரோனா - ஒருவர் உயிரிழப்பு
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 31,785- ஆக உயர்ந்துள்ளது.
காங்டாக்,
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் கடந்த 24 மணி நேரத்தில் 385- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34,030- ஆக உயர்ந்துள்ளது. சிக்கிமில் நேற்று பாதிப்பு 294- ஆக பதிவாகி இருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு 91 கூடியுள்ளது.
கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 411- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1,417- ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 31,785- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 1,745-மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகள் 2 லட்சத்து 89 ஆயிரத்து 692- ஆக உள்ளது.
Related Tags :
Next Story