கேரளாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை தாண்டியது


கேரளாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 14 Jan 2022 2:06 PM GMT (Updated: 14 Jan 2022 2:06 PM GMT)

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,338- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,338- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 53,33,828- ஆக உயர்ந்துள்ளது. 

நேற்று தொற்று பாதிப்பு 13,468- ஆக இருந்த நிலையில், இன்று தொற்று பாதிப்பு சுமார் 3 ஆயிரம் அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 199- பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  50,568- ஆக உயர்ந்துள்ளது.  

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும், 3,848- பேர் குணம் அடைந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 52,14,862- ஆக உயர்ந்துள்ளது.  

தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 76,819- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பைக் கண்டறிய  மேலும் 68,971- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 


Next Story