குளத்தில் விழுந்த பட்டத்தை எடுக்க முயன்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி


குளத்தில் விழுந்த பட்டத்தை எடுக்க முயன்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி
x
தினத்தந்தி 15 Jan 2022 5:55 AM GMT (Updated: 15 Jan 2022 5:55 AM GMT)

குளத்தில் விழுந்த பட்டத்தை எடுக்க முயன்ற சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போபால்,

பட்டம்விட்டு விளையாடிக்கொண்டிருந்த 13 வயது சிறுவன் குளத்தில் விழுந்த பட்டத்தை எடுக்க முயன்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் கரோத் போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட சத்கேடா கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஷாபீர் ஹூசைன். இந்த நிலையில் சிறுவன் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த போது பட்டம் காணாமல் போயுள்ளது. பட்டத்தில் இருந்த நூலைப் பின்தொடர்ந்து சென்ற சிறுவன் பட்டம் குளத்தில் விழுந்துள்ளதை கண்டுள்ளான். 

இதையடுத்து குளத்தில் விழுந்த பட்டத்தை எடுக்க முயன்றபோது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story