மராட்டியத்தில் போலீசாருக்கு கொரோனா; பாதிப்பு-81, சிகிச்சை-1,312


மராட்டியத்தில் போலீசாருக்கு கொரோனா; பாதிப்பு-81, சிகிச்சை-1,312
x
தினத்தந்தி 15 Jan 2022 6:03 PM GMT (Updated: 15 Jan 2022 6:03 PM GMT)

மராட்டியத்தில் ஒரே நாளில் 81 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.


மும்பை,



மராட்டியத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 42 ஆயிரத்து 462 பேருக்கு புதிதாக இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பிற்கு 23 பேர் உயிரிழந்து உள்ளனர்.  மராட்டியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1.41 லட்சத்திற்கு கூடுதலாக அதிகரித்துள்ளது.

2 லட்சத்து 64 ஆயிரத்து 441 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  22 லட்சம் பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்.  6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், மராட்டியத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 81 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  1,312 போலீசார் சிகிச்சையில் உள்ளனர்.  இதுவரை கொரோனாவுக்கு 126 போலீசார் உயிரிழந்து உள்ளனர் என மும்பை போலீசார் தெரிவித்து உள்ளனர்.


Next Story