மும்பை போலீசார் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


மும்பை போலீசார் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 17 Jan 2022 7:24 PM GMT (Updated: 17 Jan 2022 7:24 PM GMT)

மராட்டியத்தில் மும்பை போலீசாரில் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.



மும்பை,


இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகத்தில் பரவி வருகிறது.  இதனை முன்னிட்டு நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.

இவற்றில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது.  கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில், ஊரடங்கு கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டு உள்ளன.

மராட்டியத்தின் மும்பை நகரில் கடந்த 24 மணிநேரத்தில் நேற்று (திங்கட்கிழமை) 5,956 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தன.  12 பேர் உயிரிழந்து இருந்தனர்.  மொத்த பாதிப்பு 10.05 லட்சம் ஆகவும், உயிரிழப்பு 16,469 ஆகவும் உயர்ந்து உள்ளது.

இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் (திங்கட்கிழமை) மும்பை போலீசாரில் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  126 போலீசார் இதுவரை உயிரிழந்து உள்ளனர்.  கொரோனாவுக்கு, சிகிச்சை பெறும் போலீசாரின் எண்ணிக்கை 1,341 ஆக உயர்ந்து உள்ளது.


Next Story