இந்தியா: நேற்று 2.38 லட்சம், இன்று 2.82 லட்சம் - வேகமெடுக்கும் தினசரி கொரோனா பாதிப்பு...!


இந்தியா: நேற்று 2.38 லட்சம், இன்று 2.82 லட்சம் - வேகமெடுக்கும் தினசரி கொரோனா பாதிப்பு...!
x
தினத்தந்தி 19 Jan 2022 4:08 AM GMT (Updated: 19 Jan 2022 4:08 AM GMT)

இந்தியாவில் நேற்று 2.38 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. 

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 970 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது நேற்றைய பாதிப்பான 2 லட்சத்து 38 ஆயிரத்து 18 மற்றும் நேற்று முன் தின பாதிப்பான 2 லட்சத்து 58 ஆயிரத்து 89 மற்றும் அதற்கு முன்தின (ஜன.16) பாதிப்பான 2 லட்சத்து 71 ஆயிரத்து 202-ஐ விட அதிகமாகும்.

இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 78 லட்சத்து 1 ஆயிரத்து 241 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 88 ஆயிரத்து 157 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 55 லட்சத்து 83 ஆயிரத்து 39 ஆக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 18 லட்சத்து 31 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 441 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 87 ஆயிரத்து 202 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 158 கோடியே 88 லட்சத்து 47 ஆயிரத்து 554 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story