கோவாவில் அதிகரிக்கும் கொரோனா; இன்று 3,936 பேருக்கு தொற்று உறுதி
கோவாவில் இன்று ஒரே நாளில் 3,936 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பனாஜி,
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் பதிவாகி வருகிறது. பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்த வகையில் கோவாவிலும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
அதன்படி இன்று ஒரே நாளில் அங்கு 3,936 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கோவாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,19,107 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் 3,119 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதன் மூலம் கோவாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,92,724 ஆக அதிகரித்துள்ளது. இன்று 7 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,576 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கோவாவில் 22,807 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story