இந்தியாவில் உச்சமடையும் கொரோனா : ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது


இந்தியாவில் உச்சமடையும் கொரோனா : ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது
x
தினத்தந்தி 20 Jan 2022 4:00 AM GMT (Updated: 20 Jan 2022 4:04 AM GMT)

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல்  வேகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. 

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 17 ஆயிரத்து 532  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 82 லட்சத்து 18 ஆயிரத்து 773 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2 லட்சத்து 23 ஆயிரத்து 990  பேர் குணமடைந்துள்ளனர்.  இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 58  லட்சத்து 7 ஆயிரத்து 29ஆக அதிகரித்துள்ளது. 

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 491 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 87 ஆயிரத்து 693  ஆக அதிகரித்துள்ளது.


Next Story