மும்பையில் மேலும் 6,032 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்

மும்பையில் மேலும் 6,032 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மும்பை,

நாட்டில் கொரோனா மூன்றாம் அலை அதிகரித்து வருகிறது. மராட்டிய தலைநகர் மும்பையில் இன்று மட்டும் புதிதாக 6,032 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தற்போது மும்பையில் 31,856 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 18,241 பேர் குணமடைந்துள்ளனர்.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில், கிட்டத்தட்ட 84 சதவீதம் பேர் அறிகுறி இன்றி கானப்படுகின்றனர். 538 பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 103 பேர் மட்டுமே ஆக்ஸிஜன் சிகிச்சையில் உள்ளனர்.

கடந்த ஆண்டு, ஏப்ரல் 4 அன்று மும்பையில் அதிகபட்சமாக 11,163 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் அதிகபட்சமாக 90 இறப்புகள் மே 1 அன்று பதிவாகியுள்ளது.


Next Story