குஜராத்தில் புதிய சர்க்யூட் ஹவுசை பிரதமர் மோடி திறந்து வைத்து காங்கிரஸ் மீது தாக்கு


குஜராத்தில் புதிய சர்க்யூட் ஹவுசை பிரதமர் மோடி திறந்து வைத்து காங்கிரஸ் மீது தாக்கு
x
தினத்தந்தி 21 Jan 2022 12:48 PM GMT (Updated: 21 Jan 2022 12:48 PM GMT)

குஜராத்தின் சோம்நாத்தில் புதிய சர்க்யூட் ஹவுசை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்துள்ளார்.


சோம்நாத்,

குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோவிலுக்கு அருகில் புதிதாக கட்டப்பட்ட சர்க்யூட் ஹவுசை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்துள்ளார்.

இதன்பின் அவர் பேசும்போது, சுதந்திரத்துக்கு பிறகான காங்கிரஸ் ஆட்சியில் புதிய கட்டுமானங்கள் என்பது டெல்லியை சேர்ந்த சில குடும்பங்களுக்கு மட்டும்தான் சாத்தியப்பட்டது.

ஆனால், ஆளும் பா.ஜ.க. ஆட்சியில் தன் தொலைதூர பார்வையால் நாட்டிற்கு முக்கியத்துவமுள்ள பல புதிய நினைவு சின்னங்கள் கட்டப்பட்டது என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, நம் முன்னோர்கள் நமக்காக பல விஷயங்களை விட்டு சென்றிருக்கிறார்கள்.  ஆயினும் மதத்தையும், கலாசார பாரம்பரியத்தையும் பற்றி பேசுவதற்கு தனக்கு இன்னும் தயக்கம் இருப்பதாகவும் சோம்நாத் கோவில் தலைவரும் பிரதமருமான நரேந்தர மோடி கூறியுள்ளார்.

தூய்மை, சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள், நவீன மனநிலை இவை யாவும் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவமானது எனவும் அவர் கூறியுள்ளார்.


Next Story