டெல்லி: விளையாடி கொண்டிருந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; சிறுவர்கள் கைது
2 சிறுவர்கள் 8 வயது சிறுமி யிடம் சென்று ஆசை வார்த்தை கூறி அருகில் உள்ள காலி வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லி சாஸ்திரி பூங்கா பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதுக்குறித்து டெல்லி போலிசார் நடத்திய முதற்கட்ட விசாரனையில், வடகிழக்கு டெல்லியின் சாஸ்திரி பூங்கா பகுதியில் சிறுமியின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அப்பகுதியை சேர்ந்த 12 மற்றும் 10 வயதுடைய 2 சிறுவர்கள் 8 வயது சிறுமி யிடம் சென்று ஆசை வார்த்தை கூறி அருகில் உள்ள காலி வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், சிறுமி கடந்த 24-ம் தேதி மதியம் 2 மணிக்கு விளையாட சென்று மாலை 4.30 மணிக்கு வீட்டிற்க்கு வந்தவுடன் நடந்த சம்பவம் குறித்து தாயிடம் அழுதபடி கூறியுள்ளார். இதன் அடிப்படையில் சாஸ்திரி பூங்காவில் உள்ள அவர்களது வீடுகளில் இருந்து சிறுவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் சாஸ்திரி பூங்கா காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 363, 376 (அஆ) மற்றும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் கூறுகையில்,
8 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார், மேலும் அவரது மர்ம உறுப்புகளில் கடுமையான சேதம் ஏற்பட்டதால் ஐசியுவில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கொண்டிருக்கிறார், குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story