கர்நாடகாவில் இன்று 48,905 பேருக்கு கொரோனா தொற்று....!


கர்நாடகாவில் இன்று 48,905 பேருக்கு கொரோனா தொற்று....!
x
தினத்தந்தி 26 Jan 2022 3:44 PM GMT (Updated: 26 Jan 2022 3:44 PM GMT)

கர்நாடகாவில் இன்று மேலும் 48,905 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெஙகளூரு,

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கர்நாடகாவில் இன்று மேலும் 48,905 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,54,413 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,705 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 41,699 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32,57,769 ஆக அதிகரித்துள்ளது. 

கர்நாடக மாநிலம் முழுவதும் தற்போது வரை 3,57,909 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story