மத்தியபிரதேசத்தில் மேலும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி


மத்தியபிரதேசத்தில் மேலும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 26 Jan 2022 5:04 PM GMT (Updated: 26 Jan 2022 5:04 PM GMT)

மத்தியபிரதேசத்தில் மாநிலத்தில் மேலும் 9 ஆயிரம் 966 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

போபால்,

மத்தியபிரதேசத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. 

அதன்படி, மத்தியபிரதேசத்தில் மேலும் 9 ஆயிரத்து 966 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 24 ஆயிரத்து 161 ஆக அதிகரித்துள்ளது.
 
கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 8 ஆயிரத்து 604 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மத்தியபிரதேசத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 41 ஆயிரத்து 346 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 72 ஆயிரத்து 224 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

வைரஸ் தாக்குதலுக்கு மேலும் 8 பேர் உயிரிழந்தனர். இதனால், மத்தியபிரதேசத்தில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 966 ஆக அதிகரித்துள்ளது.

Next Story