பேத்தி தற்கொலை விவகாரம் எடியூரப்பாவுடன் பசவராஜ் பொம்மை சந்திப்பு


பேத்தி தற்கொலை விவகாரம் எடியூரப்பாவுடன் பசவராஜ் பொம்மை சந்திப்பு
x
தினத்தந்தி 28 Jan 2022 7:52 PM GMT (Updated: 28 Jan 2022 7:52 PM GMT)

முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் பேத்தியும், டாக்டருமான சவுந்தர்யா நேற்று காலையில் பெங்களூரு வசந்த்நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டு இருந்தார்.

பெங்களூரு, 

முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் பேத்தியும், டாக்டருமான சவுந்தர்யா நேற்று காலையில் பெங்களூரு வசந்த்நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டு இருந்தார். இதனால் எடியூரப்பா அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார். இதுபற்றி அறிந்ததும் நேற்று மதியம் பெங்களூருவில் உள்ள காவேரி இல்லத்திற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சென்றார். அங்கு எடியூரப்பாவை சந்தித்து அவர் பேசினார். அப்போது பேத்தி தற்கொலை செய்து கொண்டதற்காக எடியூரப்பாவுக்கு, பசவராஜ் பொம்மை ஆறுதல் கூறினார். அவருடன் சில நிமிடங்கள் அமர்ந்து பேசிவிட்டு, பின்னர் அங்கிருந்து பசவராஜ் பொம்மை புறப்பட்டு சென்றார்.

இதுபோன்று, போலீஸ் மந்திரியான அரக ஞானேந்திரா, மந்திரிகள் முருகேஷ் நிரானி, கோவிந்த் கார்கோள் உள்ளிட்டோரும் எடியூரப்பாவை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.


Next Story