எல்லையில் பாகிஸ்தான் கடத்தல்காரர்களிடம் இருந்து 47 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு படையினருக்கும், பாகிஸ்தான் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது.
சண்டிகார்,
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் எல்லை பாதுகாப்பு படையினருக்கும், பாகிஸ்தான் கடத்தல்காரர்களுக்கும் இடையே நேற்று அதிகாலை துப்பாக்கி சண்டை மூண்டது.
இந்த சண்டையில், எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவருக்கு தலையில் குண்டு காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சண்டையை தொடர்ந்து, 47 கிலோ ஹெராயின் போதைப்பொருள், 7 பாக்கெட் அபின் போதைப்பொருள், 2 கைத்துப்பாக்கிகள், வெடிமருந்துகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
Related Tags :
Next Story