ஜார்கண்ட் சுரங்க விபத்து: பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்வு


ஜார்கண்ட் சுரங்க விபத்து: பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
x
தினத்தந்தி 2 Feb 2022 6:23 PM GMT (Updated: 2 Feb 2022 6:23 PM GMT)

ஜார்கண்ட் சுரங்க விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

தன்பாத்,

ஜார்கண்ட் மாநிலத்தில் கைவிடப்பட்ட நிலக்கரி சுரங்கத்தில் இறங்கிய 10-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் மண்சரிவு ஏற்பட்டு புதைந்தனர். சட்டவிரோதமாக சுரங்கத்தில் இறங்கியதால் எத்தனை பேர் விபத்தில் சிக்கினார்கள் என்ற விவரம் உறுதியாகதெரியவில்லை.

செவ்வாய்க்கிழமை இரவு வரை 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த நிலையில் சுரங்கத்தில் புதைந்து பலியான மேலும் ஒருவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால் இறப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. கைப்பற்றப்பட்ட உடல்களில் 4 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுரங்கத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Next Story