திருப்பதியில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு..!
திருப்பதியில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதி,
திருப்பதியில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இலவச பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக, திருப்பதியில் இருந்து திருமலைக்கு தேவஸ்தான ஊழியர்கள் சிலருடன் சென்ற தேவஸ்தானத்திற்கு சொந்தமான இலவச பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைக்கண்ட பேருந்து டிரைவர் உடனடியாக வண்டியை நிறுத்தினார்.
இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். பேருந்தில் டீசல் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததும் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
Related Tags :
Next Story