குஜராத்தில் ரூ.1,439 கோடி போதைப்பொருள் பறிமுதல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 25 April 2022 7:49 PM GMT (Updated: 25 April 2022 7:49 PM GMT)

குஜராத்தில் ரூ.1,439 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆமதாபாத், 

குஜராத்தின் கண்ட்லா துறைமுகத்துக்கு போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டுள்ளதாக வருவாய் புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் துறைமுகத்தில் உள்ள கன்டெய்னர்களை சோதனை செய்தனர். அப்போது அந்த கன்டெய்னர்களில் 205.6 கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

அந்த கன்டெய்னர்களை இறக்குமதி செய்த உத்தரகாண்ட் நிறுவனத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் பஞ்சாப்பில் வைத்து போதைப்பொருள் கடத்தல் நபரை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். சிக்கியிருக்கும் போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.1,439 கோடி வரை இருக்கும் என தெரியவந்துள்ளது.

Next Story