“மத்திய அரசின் முயற்சியால் இந்திய பொருளாதாரம் மீட்சி அடைந்து வருகிறது” - ராஜ்நாத் சிங்
மத்திய அரசின் முழுமூச்சான முயற்சிகளால் இந்திய பொருளாதாரம் மீட்சி அடைந்து வருவதாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிதிச் சந்தை குறித்த பயிலரங்கில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“கொரோனா பெருந்தொற்று மற்றும் ரஷ்யா-உக்ரைன் மோதலால் ஏற்பட்டுள்ள விநியோகச் சங்கிலி இடையூறுகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து இடையூறுகள் காரணமாக உலகப் பொருளாதாரம் மிகவும் கடினமான கட்டத்தில் இருக்கிறது.
கொரோனா தொற்று பரவலுக்கு இடையே அரசு எடுத்த முழுமூச்சான முயற்சிகளின் காரணமாக இந்திய பொருளாதாரம் ‘வி’ வடிவ மீட்சி அடைந்து வருகிறது.
தேசிய மற்றும் சர்வதேச தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்வதில் அரசு உறுதியாக உள்ளது. வெளிநாட்டு சந்தைகளுக்கான அணுகலை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.”
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story