டெல்லியில் புதிதாக 613 பேருக்கு கொரோனா; மேலும் 784 பேர் டிஸ்சார்ஜ்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 15 May 2022 6:42 PM GMT (Updated: 15 May 2022 6:44 PM GMT)

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 613 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று 613 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 19,00,358 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,195 ஆக உள்ளது. அதே சமயம் டெல்லியில் இன்று 784 பேர் கொரோனா சிகிச்சையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  

இதன் மூலம் டெல்லியில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18,70,401 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது 3,762 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Next Story