பன்னரகட்டா பூங்காவில் 3 புலிகள் உயிரிழப்பு


பன்னரகட்டா பூங்காவில்  3 புலிகள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 17 Sep 2022 6:45 PM GMT (Updated: 17 Sep 2022 6:47 PM GMT)

பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் மூன்று புலிகள் செத்தன.

பெங்களூரு:


பெங்களூரு புறநகர் ஆனேக்கல் பகுதியில் பன்னரகட்டா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு புலிகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களில் கிரண், சிவா உள்பட 3 புலிகள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தன. இதுகுறித்து பன்னரகட்டா உயிரியல் பூங்கா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே புலிகள் உயிரிழப்புக்கு நோய் தொற்று ஏதும் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.


Next Story