அசாம் வெள்ளம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்வு: 47 லட்சம் பேர் பாதிப்பு


அசாம் வெள்ளம்: உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 82 ஆக உயர்வு: 47 லட்சம் பேர் பாதிப்பு
x

Image Courtesy : PTI 

அசாமில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது

கவுகாத்தி,

அசாமில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.மழை-வெள்ளம் ஒருபுறம் இருக்க பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு பெருத்த சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன

வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது. இதைப்போல தேசிய-மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், போலீசாரும் இணைந்து இந்த மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11 பேர் பலியாகி உள்ளனர்.இதுவரை வெள்ளத்தில் சிக்கி 82 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.மேலும் 47 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் .அசாம் வெள்ள நிவாரண பணிகளை முடுக்கிவிட மத்திய அரசு மாநில அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.

அசாம் வெள்ள நிவாரண பணிகளை முடுக்கிவிட மத்திய அரசு மாநில அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. மேலும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மாநில முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவை தொலைபேசியில் அழைத்து நிலவரங்களை கேட்டறிந்தார்.


Next Story