அசாம் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு


அசாம் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு
x

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

கவுகாத்தி,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள கச்சார் மாவட்டத்தில் உள்ள போராகாய் தேயிலைத் தோட்டப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.

நடப்பு ஆண்டில் மட்டும் அசாம் முழுவதும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே திப்ருகரின் ரோமோரியாவில் பிரம்மபுத்திரா ஆற்றில் 9 பேர் சென்ற படகு கவிழ்ந்ததில் 5 பேர் நீரில் மூழ்கினர். 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.


Next Story