கோவா கடற்கரையில் வெளிநாட்டு பெண் பாலியல் வன்கொடுமை


கோவா கடற்கரையில் வெளிநாட்டு பெண் பாலியல் வன்கொடுமை
x

கோவா கடற்கரையில் வெளிநாட்டு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பனாஜி,

கோவா மாநிலத்தில் உள்ள கடற்கரைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

இந்நிலையில், பிரிட்டனை சேர்ந்த பெண்மணி தனது கணவனுடன் கடந்த 2-ம் தேதி கோவாவில் உள்ள அரம்பொல் கடற்கரையின் ஸ்வீட் லேக் பகுதிக்கு சென்றுள்ளனர். கடற்கரையில் அந்த பெண் தனியாக ஓய்வெடுத்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த நபர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பிரிட்டன் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 32 வயதான கோவாவை சேர்ந்த ஜோயல் வின்சென்ட் டி சுசா என்ற நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story