தலைநகர் டெல்லியில் இன்று சற்று அதிகரித்த கொரோனா பாதிப்பு
தலைநகர் டெல்லியில் நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடும்போது இன்றைய கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அதன்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 2 ஆயிரத்து 31-ஐ விட அதிகமாகும்.
இதனால், டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 84 ஆயிரத்து 595 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 8 ஆயிரத்து 430 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேவேளை கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், டெல்லியில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 381 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story