டெல்லி காற்று மாசு; விவசாயிகளிடம் மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் - மத்திய அரசு


டெல்லி காற்று மாசு; விவசாயிகளிடம் மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் - மத்திய அரசு
x

காற்று மாசு குறித்து கிராமங்கள் தோறும் விவசாயிகளிடம் மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி அருகே உத்தர பிரதேசம், பஞ்சாப், அரியாணா ஆகிய மாநிலங்களில் உள்ள கிராமங்களில், அறுவடைக்குப் பிறகு வேளாண் கழிவுகளை விவசாயிகள் எரிப்பதால் ஏப்ரல், மே மற்றும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் டெல்லியில் காற்று மாசு அதிகரிக்கிறது. இந்நிலையில், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் டெல்லியில் உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதுதொடர்பாக மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், டெல்லி காற்று மாசு பிரச்சினை குறித்து கிராமங்கள் தோறும் விவசாயிகளிடம் மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் நடப்பாண்டில் வேளாண் கழிவுகள் அறவே எரிக்கப்படக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அந்தந்த மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.


Next Story