இந்திய-வியட்நாம் வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திப்பு


இந்திய-வியட்நாம் வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திப்பு
x

இந்திய-வியட்நாம் வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திப்பு இன்று டெல்லியில் நடைபெற்றது.

புதுடெல்லி,

இந்தியா - வியட்நாம் இடையே தூதரக ரீதியிலான உறவு தொடங்கப்பட்டு 50 ஆண்டுகளை எட்டியுள்ளது. இந்த நிலையில், வியட்நாம் வெளியுறவுத்துறை மந்திரி புய் தங் சன் இந்தியாவுக்கு வந்துள்ளார்.

அவர் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கரை இன்று தலைநகர் டெல்லியில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவை வலுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இரு நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.


Next Story