ஒவ்வொரு இரண்டரை மணி நேரத்திற்கு ஒரு காதல் ஜோடி வீட்டை விட்டு ஓட்டம்...!


ஒவ்வொரு இரண்டரை மணி நேரத்திற்கு ஒரு காதல் ஜோடி வீட்டை விட்டு ஓட்டம்...!
x
தினத்தந்தி 27 Sep 2022 12:53 PM GMT (Updated: 27 Sep 2022 12:57 PM GMT)

பீகாரில் ஒவ்வொரு இரண்டரை மணி நேரத்திற்கும் ஒரு காதல் ஜோடி வீட்டை விட்டு ஓட்டம் பிடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாட்னா,

பீகாரில், கடந்த சில மாதங்களாக தங்கள் பெண் குழந்தை காணாமல் போனதாக அல்லது கடத்தப்பட்டதாக புகார் அளிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் போலீசார் விசாரணையில் சிறுமிகள் கடத்தப்படவில்லை என்று தெரியவந்து உள்ளது. அவர்களாகவே விருப்ப பட்டு காதலனுடன் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

போலீசாரின் அறிக்கையை நம்பினால், கடந்த 6 மாதங்களில், பீகாரில் இதுபோன்ற 1870 சிறுமிகள் திருமணத்திற்காக ஓடிப்போனதாக வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஜனவரி மாதத்தில் 240 வழக்குகளும், பிப்ரவரியில் 247 வழக்குகளும், மார்ச்சில் 297 வழக்குகளும், ஏப்ரலில் 330 வழக்குகளும், மே மாதத்தில் 383 வழக்குகளும், ஜூன் மாதத்தில் 373 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த எண்ணிக்கை தினசரி அடிப்படையில் பார்த்தால், பீகாரில் ஒவ்வொரு இரண்டரை மணி நேரத்திற்கும் ஒரு காதல் ஜோடி வீட்டை விட்டு ஓட்டம் பிடிக்கிறது. அதே நேரத்தில், இந்த ஆண்டு, அதாவது 2022 இல் இதுவரை 2778 இளம்பெண் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் படி, இந்த வழக்கில் பீகார் இரண்டாவது இடத்தில் உள்ளது. 2020ல் 5308 சம்பவங்கள் நடந்த நிலையில், 2021ல் 6589 வழக்குகள் பதிவாகியுள்ளன.

முன்பெல்லாம் ஆண்கள் பெண்ணுடன் ஓடிவந்த நிலையில், தற்போது பெண்கள் தன் காதலனுடன் ஓடுகிறார்கள். காதலனுடன் ஓடிப்போய்விட்டதாக காதலி முன் வந்து வெளிப்படையாக அறிவிப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

பீகாரில் கடந்த 2015-ம் ஆண்டு காதல் மற்றும் திருமணம் ஆகிய நோக்கத்தில் கடத்தப்பட்டதாக 4229 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2016 இல், இந்த வழக்குகள் 4652 ஆக அதிகரித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில், கடத்தல் வழக்குகளின் அதிகரித்து 6217 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டை விட 2018 ஆம் ஆண்டில் 2000 வழக்குகள் அதிகரித்து சுமார் 8 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


Next Story