ராஜஸ்தானில் கொட்டித் தீர்த்த கனமழை - தண்ணீரில் தத்தளிக்கும் வாகனங்கள்
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இடைவிடாது பெய்த கனமழையால், பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழையால், பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும், முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பணிக்கு சென்றவர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
சாலைகளில் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தவாறு ஊர்ந்து சென்றன. இந்த நிலையில், அங்குள்ள ஆல்வார், சிஹார், ஜலாவார் ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story