நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணை கொன்ற கணவர் கைது


நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணை கொன்ற கணவர் கைது
x

நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணை கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்

பெங்களூரு: உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அரவிந்த். இவரது மனைவி மம்தா (வயது 30). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். அரவிந்த் தனது மனைவி 2 மகன்களுடன் சிக்பள்ளாப்பூர் டவுனில் வசித்து வந்தார். மேலும் ஒரு ஓட்டலில் அரவிந்த் வேலை செய்தார். இந்த நிலையில் அரவிந்த்துக்கு, மம்தாவின் நடத்தையில் சந்தேகம் உண்டானது. இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதுபோல நேற்று முன்தினம் இரவும் 2 பேருக்கும் இடையே ஏற்பட்ட தகராறின் போது மம்தாவின் தலையை பிடித்து அரவிந்த் சுவரில் முட்டியுள்ளார். இதில் மயங்கி விழுந்த மம்தா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிக்பள்ளாப்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்த்தை கைது செய்தனர். விசாரணையில் நடத்தையில் சந்தேகத்தில் மம்தாவை, சந்தோஷ் கொன்றது தெரியவந்து உள்ளது.


Related Tags :
Next Story