மனைவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்த நபரை கொன்ற கணவருக்கு ஜாமின் வழங்கிய கோர்ட்டு


மனைவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்த நபரை கொன்ற கணவருக்கு ஜாமின் வழங்கிய கோர்ட்டு
x

'தற்காத்துக்கொள்ள அனைவருக்கும் உரிமை உண்டு’ மனைவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த நபரை கொன்ற கணவருக்கு கோர்ட்டு ஜாமின் வழங்கியது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பூமாசந்திரா பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் மகேந்திரா. இவருக்கு நந்தினி என்ற மனைவியும் 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

கடந்த ஆண்டு மகேந்திரன் தனது மனைவி, குழந்தையுடன் சந்தபுரா பகுதியில் உள்ள ஒடு வாடகை வீட்டில் வசித்து வந்தார். அந்த வாடகை வீட்டின் உரிமையாளரின் மகன் சந்தோஷ் குமார் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரான்சில் இருந்து சந்தபுராவுக்கு வந்துள்ளார்.

சந்தோஷ்குமார் மகேந்திரனின் மனைவி நந்தினியுடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். மேலும், அவருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால், சந்தபுராவில் இருந்து வீட்டை காலி செய்துவிட்டு மகேந்திரன் தனது குடும்பத்துடன் பூமனஹெல்லி பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளார்.

ஆனாலும், நந்தினியை சந்தித்க்க சந்தோஷ் குமார் முயற்சித்துள்ளார். பின்னர், பிரான்ஸ் சென்ற சந்தோஷ் குமார் மீண்டும் பிப்ரவரி மாதம் பெங்களூரு திரும்பியுள்ளார். அவர் நந்தினியை பார்க்க முயற்சித்துள்ளார். அப்போது, நந்தினியின் கணவர் மகேந்திரனுக்கும் சந்தோஷுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து உள்ளூர் போலீசில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கபட்டுள்ளது. நந்தினியை தொடர்பு கொள்ளக்கூடாது தொல்லை கொடுக்கக்கூடாது என சந்தோஷை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

தொடர்ந்து ஏப்ரல் மாதம் உள்ளூர் மதுக்கடையில் இருந்த நந்தினியின் கணவர் மகேந்திரனை சந்தோஷ் தனது நண்பர் அருணுடன் இணைந்து தாக்கியுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் பூமனஹெல்லி நகரில் இருந்து மகேந்திரன் தனது குடும்பத்துடன் மதினா நகர் பகுதிக்கு இடமாறியுள்லார்.

மதினா நகரில் மகேந்திரன் குடும்பம் வீடு இருக்கும் இடத்தை அறிந்த சந்தோஷ் தனது நண்பர் அருணுடன் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி மகேந்திரன் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது, மகேந்திரனுக்கும் சந்தோஷூக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையின் மோது சந்தோஷ் அவரது நண்பர் அருண் ஆகிய இருவரையும் மகேந்திரன் கடுமையாக தாக்கியுள்ளார்.

படுகாயமடைந்த சந்தோஷூம் அவரது நண்பர் அருணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், மகேந்திரன் கடுமையாக தாக்கியதில் படுகாயமடைந்த சந்தோஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, அருண் அளித்த புகாரின் அடிப்படையின் மகேந்திரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கும்படி மகேந்திரன் கீழமை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், மகேந்திரனுக்கு ஜாமின் வழக்க கோர்ட்டு மறுத்துவிட்டது.

இதனை தொடர்ந்து கீழமை கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தனக்கு ஜாமின் வழங்கக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மகேந்திரன் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு கர்நாடக ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மகேந்திரனுக்கு ஜாமின் வழங்கி கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

மகேந்திரன் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், மகேந்திரன் தற்காப்புக்காவே தாக்குதல் நடத்தியதாகவும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தற்காத்துக்கொள்ள உரிமை உள்ளது எனவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மகேந்திரனுக்கு ஜாமின் வழங்கிய கோர்ட்டு, மகேந்திரன் இல்லாத நேரத்தில் நந்தினியை பின்தொடந்து தொல்லைகொடுத்து வந்துள்ளார். மகேந்திரன் வீட்டிற்குள் சந்தோஷூம், அருணும் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்' என தெரிவித்த கோர்ட்டு மகேந்திரனுக்கு ஜாமின் வழங்கியுள்ளது.


Next Story