திருமணம் நிச்சயமான புதுமாப்பிள்ளை தற்கொலை

திருமணம் நிச்சயமான புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்டார்.
பெங்களூரு: பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா அரிசினகுண்டே கிராமத்தை சேர்ந்தவர் கிரண் (வயது 26). இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது. அடுத்தமாதம் (ஆகஸ்டு) கிரணுக்கும், அந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த கிரண் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.. இதுகுறித்து நெலமங்களா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





