வருமான வரித்துறை தனக்கு ஒரு 'காதல் கடிதம்' அனுப்பியுள்ளது - சரத் பவார் கிண்டல்


வருமான வரித்துறை தனக்கு ஒரு காதல் கடிதம் அனுப்பியுள்ளது - சரத் பவார் கிண்டல்
x

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

புதுடெல்லி,

2004, 2009 ஆண்டுகளில் மக்களவைக்கும், 2014, 2020 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்களவைக்கும் போட்டியிட்ட சரத் பவார் அப்போது அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்த சொத்து விவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் நோக்கில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை அமலாக்கத்துறை எனும் பெயரையே தாங்கள் கேள்விப்பட்டதில்லை என தெரிவித்துள்ள அவர், தற்போது உங்களுக்குப் பின்னால் அமலாக்கத்துறை இருக்கும் என கிராமத்து மக்களே கிண்டல் செய்யும் அளவுக்கு அமலாக்கத்துறை அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாக விமர்சித்துள்ளார்.

இதேபோல், வருமான வரித்துறை தனக்கும் ஒரு 'காதல் கடிதம்' அனுப்பியுள்ளது என கிண்டல் செய்துள்ள சரத் பவார், தேர்தலின்போது தான் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story